பக்கம்:வியாச விளக்கம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உ-ம். கெத்செமனேயில் இயேசு சீடர்களை விட்டுத் தனித்துச் செபம் பண்ணுகிறார். சீடர்கள் ஏங்குகிறார்கள். இயேசு அவர்களைத் தட்டி எழுப்புகிறார். ஒரு பெரிய பகைக்கூட்டம் வருகிறது. யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுக்கிறான். பகைவர் இயேசு வைப் பிடிக்கிறார்கள். 13. ஆட்படையணி - Personification. ஓர் அஃறிணைப்பொருளை உயர்திணையாகக் கூறவது ஆட்படை! யணியாம். உ-ம், கதிரவன் மேலைக்கடலில் ஆழ்ந்தான். இறக்தோரையும் பிரிக்தோரையும், உயிரற்ற பொருள்களையும் கருத்துக்களையும், விளிப்பது விளியணி (Apostrophe) யாம். உ-ம், மாணமே! உன் கூர் எங்கே? - புதிய ஏற்பாடு.! 14, ஏற்றவணி - Climax. பொருள்களைப் படிப்படியாய் ஒன்று சொன்று மேலாகக் கூறுவது ஏற்றவணியாம். உ-ம். இலக்கணமும் இலக்கியமும் சேர்க்க த இயற்றமிழ்; அதெனொடு இராகமும் தாளமும் சேர்ந்தது இசைத் தமிழ்; அதனாடு அபி நயமும் ஆட்டமும் சேர்ந்தது நாடகத்தமிழ். 15. இறக்கவணி - Anticlimax or Bathos. பொருள்களைப் படிப்படியாய் ஒன்றுக்கொன்று கீழாகக் கூறவது இறக்கவணியாம். உ-ம். ஒரு சன்மையைப் பெரியோர் சொல்லாமற் செய்வர்; சிறியோர் சொல்லிச் செய்வர்; கீழ்மக்கள் சொல்லியுஞ் செய்யார். 16. ஒலியணி - On-om-a-to-pe-ia. சொற்களின் ஒலியினால் அச்சம், வெகுளி முதலிய சுவை (சசம்) தோன்றச் கூறுவது ஒலியணியாம். உ-ம், உலகமெல்லாம் கிடுகிடுவென்று எடுக்கும்படி ஓர் இடிமுழங்கிற்று,