இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
43
சேவலோ, கரடி, ஓநாய், வேட்டைப் பருந்து ஆகியவற்றை உதவிக்கு அழைத்தது. அவை அனைத்தும் ஓடி வந்தன.
கூடத்தில் ஒரே சண்டை. இவைகளைக் கொல்ல வந்த வேலையாட்கள் ஓட ஓட விரட்டப் பட்டார்கள். இங்கும் அங்குமாகச் சிதறடிக்கப் பட்டார்கள். திரும்பிச் செல்ல வழி தெரியாது திணறினார்கள். சேவல் பறந்து சென்று பணக்காரனை இழுத்து வந்தது.
"இங்கே பார்; விரைவாக முடிவெடு! ஒன்று நீ இறங்கத் தயாராக வேண்டும். இல்லையானால் எனது பன்றிகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும்? என்று அதட்டிக் கேட்டது சேவல்.
ஐயோ, சாவதைவிட பன்றிகளைப் பார்த்துக் கொள்வதே மேல்” என்று அழுதான் பணக்காரன்.