பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

ஏற்பாடு செய்திருந்த பேட்டை ரவுடி களுக்கு. அந்த அடங்காப் பிடாரியும் அடங்கிப் போன கணவனும், பணம் தரமுடியாமல், இரவோடு இரவாக ஓடினார்கள். பரிதாபப்பட்டு, மோசம் போன இந்த சம்பவம் என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சியாகப் போய்விட்டது.

இதில் என்ன லாபம் என்றால், இந்தச் சம்பவம் நடக்காமல் இருந்திருந்தால், நானும் மேற்கு மாம்பலம் பகுதியை விட்டு வெளியே வந்திருக்கவே மாட்டேன்.

எடுப்பு கக்கூஸ், உப்பு தண்ணிர் உள்ள கிணறு, இருண்ட மண்டபம் போன்ற வீடு, கொசுக்களின் கூட்டம், அடிக்கடி தற்கொலை செய்து கொள்கின்ற எலக்டிரிக் டிரெயின் தண்டவாளப் பகுதி, இவற்றையெல்லாம் நான் விட்டு விட்டு, தி.நகர் பகுதிக்கு வந்துவிட இந்த சம்பவமே எனக்கு உதவியது.

கெட்டதிலும் ஒரு நல்லது என்று நினைத்துக் கொண்டேன். உதவி செய்யப்போய், உபத்திரவம் அடைந்து இந்த சம்பவத்திலிருந்து, நான் மீண்டு, சகஜ நிலைக்கு வர கொஞ்ச காலம் பிடித்தது.

ஆமாம்! எழுத்துப் பணியை மறந்து ஒழுங்காக உத்தியோகம் பார்க்க பாடி டி.வி.எஸ் கம்பெனிக்குப் போய்

வந்தேன்.

    • 1

அங்கே போனதும்தான், என் எழுத்துக்கு வேகம் கிடைத்தது.