பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119 கரும்பைப் பார்த்தால் என்ன தெரியும்? கடித்துத் தின்று சுவைத்தால்தான் கரும்பின் இனிமை புரியும். உடற் பயிற்சி விளையாட்டுக்களில் ஈடுபட்டு உண்மையை உணர்ந்தால்தான் அதன் பெருமை புரியும்.

நம்பியுள்ள குடும்பத்தார்க்கு நல்ல துணையாகவும், நலந்தரும் நிழலாகவும், நாளெல்லாம் இன்பத்துடன் வழி நடத்தும் தலைவராகவும் வாழ, கடுத்தர வயதினருக்குக் கடமையும், பொறுப்பும் இருப்பதால் 'இன்றே செய்க! இனியவை பெறுக’ என்பதே இயற்கையின் எழுதாக் கட்டளை.

பாடுபடுவோம். பயன் பெறுவோம்! நடுத்தர வயதிலும் காடிய இன்பங்களை அடைவோம்