19
மலை விழுங்கிகளாக, ஊசிகளைப் போட்டு உடலைத்துளைத்துக் கொண்டு உயிர் வாழ்கின்ருர்களே, அந்த வாழ்வு எப்படி இருக்கும் மருந்தால் உயிர் வாழ்வது ஒரு வாழ்வா?
பணக்காரர்களுக்கென்று பல புது நோய்கள் உண் டாகி. உருவாகி, வந்து கிறைந்து கிடைக்கின்றனவே என்று கேலியாகப் பேசும் அளவுக்குப் பல புது நோய்கள் அவர்கள் உடலுக்குள் புகுந்து இனவிருத்தி செய்து வருகின்றனவே! அதையும் பாருங்கள்.
அப்படி என்றால் வாழ்வு எப்படித்தான் அமைய வேண்டும் என்ருல், சுமையில்லாத சுவைதரும் சுகமான தாக இருக்க வேண்டும்.’’ என்றுதான் கூற வேண்டும்.அதுதான் அருமையான வாழ்வாகும்.
படுத்தவுடன் உறங்கி, காலையில் விழித்தவுடன் காலைக் கடன்களை இலகுவாக முடித்து விடுபவர்களின் வாழ்வு, கலம் சூழ்ந்த வாழ்வாக இருக்கும் என்கிருர்கள் கமது முன்னேர்கள்.
படுக்கையில் படுத்தவுடன் ஒருவன் உறங்கிவிடு கிருன் என்ருல், அவனுடைய மனநிலையை கவலைகள் மேயவில்லை, ஆசைகள் துன்புறுத்தவில்லை,அமைதியை அவன் நெஞ்சம் இழக்கவில்லைஎன்பதேபொருளாகும்.
படுத்து உறங்கி விழித்தவுடன், காலைக் கடன்களை, கழிவுப் பொருட்களை அகற்றிவிடும் தன்மையில், அவனது உடலின் உள் உறுப்புக்கள் தங்கள் பணி களில் தளராமல் இருக்கின்றன என்பதே அர்த்தமாகும்.