பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. வீட்டுக்குள்ளே விளையாட்டு == வீட்டின் பெருமை இதயத்துக்குள்ளே எழும்பி வரும் ஆசைகள் எழுப்பும் இரைச்சல்களின் எக்காளம். புரியாத புதிர் களுடன் போராடும் கினைவுகளின் கும்மாளம். சிறு து.ாசி விழுந்தாலும் அலே பாய்ந்து விடுகின்ற குளத்து நீர்போல, சலனம் பாய்கின்ற சிந்தையின் சஞ்சலம். மனிதனுகப் பிறந்த ஒவ்வொரு மனிதனும் அன்ருடம் அனுபவிக்கின்ற அனுபவங்களாகும்.

ஆசைகளின் எக்காளம் சற்றேனும் அழியவும், கவலை நினைவுகளின் கும்மாளம் கொஞ்சமேனும் குலையவும், சலனம் பாயும் சஞ்சலம் சிறிதேனும் சரியவும் முயற்சிக்கின்ற ஒரு குடும்பத் தலைவரின் வீட்டிலேதான் அமைதி நிலவும். ஆனந்தம் உலவும். அன்பும் இன்பமும் குலவும். குதுகலம் கவிபாடும்.

வீடு என்பதனைச் சொர்க்கம் என்று வியந்து கூறு வார்கள் கமது முன்னேர்கள். அதனைக் கோயில் என்பார்கள். இல்லம் என்பார்கள். கடவுள் உறைவதால்