பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 85 பின்னால் வளர இருக்கும் அறிகுறிகள் முளையிலேயே காணப்பட்டன. பிறப்பு வளர்ப்பு மேரிகியூரி 1867 ஆம் ஆண்டு நவம்பர் ஏழாம் நாள் போலந்து நாட்டில் வார்சா என்னும் இடத்தில் பிறந்தார். கியூரி என்பவரை மணந்து கொண்டதால் மேரி கியூரி என்னும் பெயர் வழங்கப்படுகிறார். இவருக்கு இளமையில் பெற்றோர் இட்ட இயற்பெயர் மேரி 6iväß6DTGLSTEDET” (Marie Sklodowska) 6T6ILIHTSjih. மேரியின் தாய் பியானோ இசைப்பதில் வல்லவர். தந்தை அறிவியல் ஆசிரியர். தாய் மேரியின் பத்தாம் வயதில் காலமானார். மேரி தந்தையின் அறிவியல் ஆய்வுக் கூடத்தில் அவருக்குத் துணையாகப் பணி செய்ததால் இளமையிலிருந்தே அறிவியல் ஆய்வில் பெரு விருப்பம் கொண்டிருந்தார். இந்த நிலையில், போலந்து நாட்டை அடிமை கொண்டிருந்த இரஷ்யாவை மேரியின் குடும்பம் எதிர்த்துப் பேசியது. அதனால் தந்தைக்கு வேலை பறி போயிற்று. குடும்பத்தில் வறுமை தாண்டவமாடத் தொடங்கிற்று. இதனால் மேரி ஒழுங்காகப் பள்ளியில் கற்க முடிய பார்த்துக் கொண்டே கல்வி கற்றார். மேரி தம் வாழ்க்கையில் கண்ணாடிப் புட்டிகள் (Bottles) கழுவும் வேலையும் பார்த்திருக்கிறார்.