பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 விழா தந்த விழிப்பு

ஒரளவு சேர்த்து வைத்திருப்பதாகக் கூறினான். அதோடு, அந்தப் பணத்தைக் கொண்டு விலை யுயர்ந்த மருந்துகளை வாங்கியும் வந்தான். அவ னது தாயாரும் சாவின் பிடியிலிருந்து விடு பட்டார். அந்த மாணவரின் சிறிய சேமிப்பே அந்தத் தாயின் உயிரைக் காக்கும் சஞ்சீவியாக அமைந்தது.

'இந்த நிகழ்ச்சி மற்றவர்களுக்கு வழிகாட் டியாகவும் படிப்பினையாகவும் அமைய வேண் டும். அறிவானந்தம் என்ற அந்த மாணவரே இந்த ஆண்டின் 'சிறந்த சேமிப்பு மாணவர் என்பதற்கான பரிசையும் பாராட்டையும் பெறு கிறார்!"

இதைக்கேட்ட மாணவர்களும் ஆசிரியர் களும் உற்சாக மிகுதியால் கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

கைதட்டல் ஒலி அடங்கியவுடன் தலைவர் மீண்டும் தன் பேச்சைத் தொடர்ந்தார்.

'அறிவானந்தம் தயாரித்த பேச்சே இன் றையப் பேச்சுப் போட்டியிலும் முதல் பரிசுக்கு உரியதாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது!"