பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II 2 - விவாகமானவர்களுக்கு - விந்து வெளியானபின் மூத்திரத் துவாரத்தில் விந்து கல்ந்த கோழை வந்துகொண்டிருக்கு மாதலால் மூத்திரத் துவாரத்தையும் சுத்தமாக்கிக் கொள்ளவேண்டும். அதற்கு. மூத்திரம் பெய்வதே சிறந்த முறை. (9) முதலில் உறையை மாட்டாமல் சம்போகம் செய் வோம்-உணர்ச்கி அதிகப்படும் சமயத்தில் உறையை மாட் டிக் கொள்வோம் என்று சிலர் எண்ணக்கூடும்; அது தவறு. ஆரம்பத்தில் ஆண்குறியை வழவழப்பாக்க ஊறும் நீரிலும் சுக்கில உயிர்கள் சேர்ந்திருக்கக்கூடும் என்று முன்பே கண் டோமல்லவா? அதனுல் உறையை மாட்டிக் கொள்ளாமல் ஆண் குறியைப் பெண்குறியிடம் சம்பந்தப்படுத்தவே கூடாது. (10) அபூர்வமாகச் சில சமயங்களில் உறை பலவீனமா யிருப்பது ருேந்து சம்போகிக்கும் பொழுது கிழிந்து போகலாம். அப்படி நேர்ந்தால் உடனே அரை நிமிஷமும் காலதாமதம் செய்யாமல் வெது வெதுப்பான ஜலத்தில் சாதாரண கறியுப்பாவது சீனிக்காரப்பொடி யாவது கரைத்து, டுஷ் கருவி கொண்டு பெண் குறியை நன் ருகக் கழுவிவிட வேண்டும். காலதாமதம் செய்யக் கூடாது. என்பதை மறுந்துவிடலாகாது. டுவி கருவி இல்லையானல் சாதாரணமாக நம் வீடுகளிலுள்ள கெண்டியை உபயோகிக் கலாம். கெண்டியின் மூக்கைப் பெண் குறியில் ஆழமாகச் செலுத்திக் கொண்டு கழுவவேண்டும். ஆயினும் கெண்டியை விட டுஷ் , கருவி உபயோகிப்பதே அதிக சிலாக்கியம். அது மருந்து ஷாப்பில் கிடைக்கும். மற்ற சமயங்களில் உபயோ கிக்கவும் உதவும். இப்படி உறை கிழியும்படி நேராமல் பார்த்துக் கொள்வதே நல்லது. (11) மேற்கூறிய முறைப்படி நடந்துவந்தால் பலன் நிச் சயம். கர்ப்பம் உண்டாகவே மாட்டாது. ஆல்ை ஒரு தட வைகூடத் தவருமல் உபயோகிக்க வேண்டும். ஒரு தடவை உபயோகிக்காவிட்டால் என்ன என்று எண்ணிவிடலாகாது. அந்த ஒரு தடவையில் கர்ப்பம் உண்டாகி விடக் கூடும். எந்: தத் தடவை உண்டாகும், எந்தத் தடவை உண்டாகாது என்று யார் கூறமுடியும்? ஆதலால் எப்பொழுதும் தவருமல் மேற் கூறிய சாதனங்களைப் படுக்கையருகில் வைத்திருத்தல் அத்தியாவசியம்.