பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை- 127 கள் நடைபெற்றன. ஆனல் எவற்றை வைத்து அடைக் கலாம் என்று எண்ணப்பட்டனவோ, அவை யெல்லாம் தீமையே உண்டாக்குவதாயிருந்தன. அதல்ை அவற்றை யாரும் தீண்டாதிருந்து விட்டனர். ஆனல் 1929-ம் வருஷத்தில் பெர்லின் நகரத்திலுள்ள டாக்டர் கிராபென் பெர்க் என்பவர் 10 வருஷ காலமாக ஆராய்ச்சி செய்து ஒரு கருவியைக் கண்டுபிடிக்த்ார். மெல் லிய வெள்ளிக் கம்பியை வளைத்து வளைத்து வளையம் போல் செய்யப்பட்டதே அது. அது விறைப்பாய் இராமல் வளைந்து கொடுக்கக் கூடியதாயிருக்கும். அதை டாக்டர்தான் வைக்க முடியும். அவர் கர்ப்பப் பையைப் பரிசோதித்து, அளவு எடுத்துக்கொண்டு, தேவையான வளையத்தை விஷம் போக்கி வைத்துக்கொண்டு, பிறகு பெண் குறியையும் விஷ மில்லாமல் செய்து விட்டு அதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஆயுதத்தின் உதவியால் வளையத்தைக் கர்ப்பப் பையின் வாய்க்குள் நுழைத்து வைத்துவிடுவார். அதன்பின் அந்தப் பெண் கர்ப்பத் தடைக்காக எதுவும் செய்யவேண்டியதில்லை ஆறு மாதத்துக்கு ஒரு தடவை டாக்டரிடம் போய்க் காட்டி வந்தால் போதும். ஆகவே ஒவ்வொரு சமயமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய அவசியமுமில்லை. அத்ற்காகப் பெண்ணுக்கும் ஆணுக்கும் ஏற்படும் சிரமமுமில்லை. போதுமான அறிவோ கவனமோ இல்லாதர்களும் இந்த முறையால் பயன்பெற லாம் குழந்தை பெற விரும்பினுல் வளையத்தை எடுத்து ட்டால் போதும், குழந்தை உண்டாகும். அநேக பெண் களுக்கு இந்த வளையத்தை வைத்து எடுத்த பின்னரே குழந்தை பெறும் சக்தி அதிகரிப்பதாக கிராபென் பெர்க் கூறுகிருர், வளையம் உள்ளே இருப்பதால் எவ்விதமான அசெளகர்யமும் உண்டாவதில்ல்ை. மாத விடாயும் வளையம் வைத்த மாதத்திற்கு அடுத்த மாதம் முதல் வழக்கம்போல் ஒழுங்காக வந்துகொண்டிருக்கும். ** அப்படியானல் ஏன் இந்த முறையை எல்லோரும் அனுஷ்டிக்கலாகாது என்று கேட்கலாம், அதில் சில குறை பாடுகள் இருப்பதுதான் காரணம். s (1) பெண்குறியில் மேகம் முதலிய விஷமோ, அழற் சியோ இல்லாதவர்களும், அடிக்கடி டாக்டரிடம் போய்க்