பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - I 87 ஆஸ்பத்திரிகளில் இதர பயிற்சிகளோடு இந்தப் பயிற்சியும் அளிக்க வேண்டாமா?' என்று டாக்டர் ஹார்டர்லண்டன் சுகாதார சங்கத்தின் பத்திரிகையில் கேட்கின்ருர். of it அதேபோல் அறிஞர் லஸ்கி -'பெற்ற தாய்க்கும் பிறந்த குழந்தைக்கும் நலம் தேடுவதற்காக ஏற்படுத்தும் மருத்துவ சாலைகளில் அந்த இருவருடைய நாலத்துக்கும் அஸ்திவாரமாயுள்ள கர்ப்பத் தடையையும் ஒரு முக்கிய வேலையாகச் சேர்த்துக்கொள்ள வேண்டாமா?' என்று கேட்கிரு.ர். இப்போதுள்ள கர்ப்பத் தடைச் சாதனங்களை முதல்தர மானவை என்று சொல்ல முடியாதாகையால், முதல்தர மான சாதனங்களைக் கண்டு பிடிப்பதற்காக ஆராய்ச்சி சாலைகளையும் சர்க்கார் அமைக்க வேண்டும். நாம் மேலே, கூறிய புதுவிதமான ஐந்து முறைகளேப்பற்றி ஆராய்ச்சி நடந்து வருவதாக அறிந்தோம். ஆனல் அந்த ஆராய்ச்சிகள் அரசாங்கத்தின் ஆதரவில் நடைபெறவில்லை. அரசாங்கங் களின் ஆதரவில் நடைபெற்ருல் அதிசீக்கிரத்தில் பலன் கண்டுவிட் முடியும். அந்தமாதிரிக் காரியம் சோவியத் அர சாங்கம் ஒன்றுதான் செய்து வருகிறது என்பதை மேலே கண்டோம். F. (3) கர்ப்பத் தடை முறைகள் இன்னும் பரிபூரணமான நிலைக்கு வராதபடியால் சில சமயங்களில் தவறு ஏற்பட்டுக் கர்ப்பம் உண்டாய்விடக்கூடும். ஆதலால் அந்த மாதிரி சந் தர்ப்பங்களிலும், பலவந்தமாகக் கற்பழிப்பதால் கர்ப்பம் உண்டாகும் சந்தர்ப்பங்களிலும் இதுபோன்ற இன்றியமை யாத பிற சந்தர்ப்பங்களிலும் கர்ப்பச் சிதைவு செய்து கொள்வதற்கு வேண்டிய வசதிகளும் சர்க்கார் செய்து தரவேண்டும். இப்படி ஆப்பரேஷன்-கர்ப்பத் தடை-கர்ப்பச்சிதைவு -மூன்று வழிகளாலேயே மனித ஜாதியை உயர்த்தமுடியும். இவற்றைத் தனி மனிதர்கள் யாரும் செய்ய முடியாது; , சர்க்கார்தான் செய்ய முடியும். ஆல்ை அபபடிச் சர்க் கார் செய்யும் நாள் எந்தநாளோ? ஜனங்கள் செய்ய வேண்டியது யாது? ஆயினும் அந்த நாள்வரை நாம் கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருந்துவிடலாகாது. அந்த நாள் உதயம்ா.