பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 73 பெண்பா லுகந்திலனேற் பேதாய்-இருநிலத்தோ விண்பா லியோகெய்தி வீடுவர்காண் சாழலோ என்று வெகு அழகாகக் கூறுகின்ருர். நட்பும் சகோதர வாஞ்சையுமே போதுமான நெருங்கிய தொடர்புடையனவாக இருக்குமானல் மணம் என்பது அணு வசியமேயாகும். நட்பு-சகோதர வாஞ்சைக்கும் மணத்துக்கு முள்ள வேறுபாடு சரீர போகமும் அதன் மூலம் கிடைக்கும் ஆன்ம ஐக்கியமும் அதன் நிரூபணமாகப்பெறும் மக்களும் தானே. ஆன்ம ஐக்கியத்துக்குச் சம்போகம் அவசியமில்லை யானுல் சகோதரனும் சகோதரியும் சேர்ந்து வாழ்ந்தால் போதும், உலகில் கல்யாணம் செய்யவேண்டிய அவசியமே யில்லை. சம்போக இன்பத்தைச் சிற்றின்பம் என்று கூறுவது வழக்கம். அதைக் கொண்டு அதைத் தாழ்ந்த இன்பம் என்று கருத நியாமில்லை. சிறுமை தாழ்மையன்று: சிறுமை அள வைக் காட்டும், தாழ்மை நிலையைக் காட்டும். அதனுல்தான் ஆன்மா கடவுளுடன் இரண்டறக் கலந்து அனுபவிக்கும் பேரின்பத்துக்கு கணவனும் மனைவியும் இரண்டறக் கலந்து அனுபவிக்கும் சிற்றின்பத்தை உவமையாக ஹிந்து மத நூல் களும் சாலமோனுடைய தோத்திரப் பாடல்களும் கூறு கின்றன. சரீரம் இரண்டறக்கலவாமல் ஆன்மா இரண்டறக் கலக்க முடியாது என்பதை அறிந்தே நம்முன்னேர்கள் அர்த் தநாரீஸ்வர மூர்த்தத்தை வகுத்துளர். இவ்விதமாகச் சம்போகம் சரீர சுகத்துக்கும் ஆன்ம வளர்ச்சிக்கும் அவசியமாயிருப்பதால் தம்பதிகள் குழந்தை கள் பெருமலிருப்பதற்காகப் பிரமசரியத்தைக் கைக்கொள் வது நல்லதன்று. ஆனல் பிரமசரியத்தை அனுஷ்டிக்காமல் பிள்ளைகளைப் பெற்று வந்தாலோ பிள்ளைகளுக்கும் பெற்ருே ருக்கும் நாசாமாகும். இந்த நிலைமையில் வேறுவிமோசன் மார்க்கம் ஏதேனும் உண்டோ ? கர்ப்பம் தரியாத நாட்கள் ஒரு மாதவிடாய்க்கும் மற்ருெரு மாதவிடாய்க்கும் மத் தியில் சில நாட்கள் உள, அவற்றில் கர்ப்பம் தரிப்பதில்லை. அதனால் அந்த நாட்களில் மட்டுமே காதல் வாழ்வு, மற்ற வி. ஒ-5