பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 - விவாகமானவர்களுக்கு - (4) சுக்கில உயிர் சாதாரணமாய் பல நாட்கள் pவித் திருக்குமாயினும் பெண்ணின் உடலுக்குள் மூன்று நாட் களுக்கு அதிகமாக ஜீவித்திருப்பதில்லை. (5) அதனல் கர்ப்பமுறுங் காலத்தை முட்டை வெளி யாகும் நாளுக்கு முன் மூன்று நாட்களையும், பின் ஒரு நாளே யும் சேர்த்துக் கணக்கிடவேண்டும். (6) மாதவிடாய் மாதம்சாதாரணமாக 28 நாட்களா யிருக்க வேண்டுமாயினும், எல்லோர்க்கும் அப்படியிருப்ப தில்லை. ஒரு பெண்ணுக்கே கூட சில சமயங்களில் 25-விரை குறைவாகவும் சில சமயங்களில் 30-வரை அதிகமாகவும் இருப்பதுண்டு. அதல்ை ஒரு மாதவிடாய் தைe1-ந் தேதி ஏற்பட்டால் அடுத்த மாதவிடாய் 26வயோ அல்லது 31வயோ ஏற்படும். ஆதலால் முட்டையானது 12ந்தேதி அல்லது 17-ந்தேதியில் வெளியாகும். அதனால் கர்ப்பம் உண்டாகக்கூடிய காலம் 8ந்தேதி முதல் 18ந்தேதி முடிய வாகும். இதர நாட்களில் கர்ப்பம் உண்டாகாது. ஆதலால் சுருக்கமாகச் சொன்னல் மாதவிடாய் காண்பதற்கு முந்திய ஒரு வாரமும் கண்டபின் ஒரு வாரமும் கர்ப்பம் தரியாத நாட்கள் ஆகும். இது எல்லாப் பெண்கள் விஷயத்திலும் உண்மையாய் இருக்குமானல், குழந்தை பெரு திருப்பதற்கு நல்லதோர் வழியே என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அப்படி நிச்சய மாய்ச் சொல்லுவதற்கில்லை. பதியிைரம் பெண்க்ள் விஷ யத்தில் உண்மையா யிருந்தாலும் ஒரு பெண் விஷயத்தில் பொய்த்துப் போகுமால்ை நாம் அத்தகைய விதியை நம்பி நடக்க முடியாது. இந்த இரண்டு டாக்டர்களும் கண்ட உண்மையைக் குறித்து அநேக நிபுணர்கள் ஆராய்ச்சி செய்து வருகிருர்கள். (1) இவ. கள் கூறுகிறபடி நிகழவேண்டுமானல் பெண்கள் ஆரோக்கிய முள்ளவர்களாகவும், ஜனனேந்திரி யத்தில் வேறுபாடுகள்_இல்லாதவர்களாகவும் மாதவிடாய் மாத காலம் ஒருப்போல் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். ஆனல் இப்படிப்பட்ட பெண்களைக் காண்பது அரிது.