பக்கம்:வீடும் விளக்கும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 விடும் விளக்கும் அலுத்தவர்கள் வீட்டிற்கு வந்தவுடன், அப்பா! எப்போது வீட்டுக்குப் போவோமோ என்றிருந்தது' என்று கூறுவதை நாம் கேட்டே வருகின்றோம். காரணம், வீட்டிற்கு வந்தால் இன்பம் பெறலாம் என்ற எண்ணம் அல்லவா? வீடு கட்டிக்கொள்ள முடியாத ஏழைகட்கும் பிச்சைக்காரர்கட்கும் பயன்படும்படியாகச் சத்திரம் சாவடி கட்டி வைத்தல் பெரிய அறமாகக் கருதப்படுவதும் இது பற்றியே போலும். சில அறிவிலிகள்: இதனை யறியாத மக்கள் சிலர் இன்பப் பொழுது போக்கிற்குரிய வீட்டைப் போர்க்களமாக்கிக் கொள் கின்றனர். என்னே இவர்தம் அறியாமை ஆண்கள் சிலர், வேட்டைநாய் போல் உறுமிக்கொண்டே உள்ளே நுழைகின்றார்கள். திரும்பவும் வீட்டை விட்டு வெளி யேறும் வரையிலும் இடித்துப் புடைத்துக்கொண்டே யிருக்கின்றார்கள். இவ்வறிவிலிகளின் செயலை என்னென்றுரைப்பது! பெண்களுட் சிலரும், கணவன் உள்ளே நுழைந்ததும் தொடங்கிவிடுகின்றார்கள் கதையை. அந்த ஆர்ப்பாட்டத்தைக் கணவனால் பொறுக்க முடிவதில்லை. வீட்டிற்குப் போனால் இன்பம் பெறலாம் என்ற எண்ணம் இருந்த இடத்தில், எப்போது வீட்டை விட்டு வெளியேறுவோம் என்ற எண்ணம் குடிபுகுந்து விடுகின்றது. 'பத்தாவுக் கேற்ற பதிவிரதை உண்டானால் எத்தாலும் கூடி யிருக்கலாம்-சற்றேனும் ஏறுமா றாக இருப்பளே யாமாயின் கூறாமல் சங்கியாசங் கொள்'