பக்கம்:வீடும் விளக்கும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 வீடும் விளக்கும் எனக் கந்தபுராணத்தில் கச்சியப்ப முனிவர் அழகாகக் கூறியுள்ளார். பறவையின் கூட்டிற்கே விளக்குத் தேவை யென்றால் மனிதன் வீட்டிற்கும் விளக்குத் தேவை எனச் சொல்லவும் வேண்டுமோ? அப்படியென் றால் அவ்வீட்டை விளக்கும் விளக்கு எது என்று நோக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது, அதுவே இந்நூலில் எடுத்துக் கொண்டதுமாகும். ஆனால், இந் நூலில் ஒரே ஒரு விளக்கு மட்டும் பேசப்படப்போவ தில்லை. ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு விளக்குக்கள் பேசப்படப் போகின்றன. அவ்விரண்டு விளக்குக்களும் உள்ளபோதே வீடு நன்கு விளக்கம் பெறும். வீடுமட்டுமோ? நாடே விளக்கம் பெறுமென் றால் அதுவும் பொருத்தமான தொன்றாகும். இனி அவ்விரண்டு விளக்குக்களையும் இரண்டு பகுதிகளில் அமைத்துச் செல்வோம்.