பக்கம்:வீடும் விளக்கும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 விடும் விளக்கும் ஒரு வேலையின் நிமித்தம் வெளியில் சென்றிருக் கலாம். அல்லது வீட்டில் இருந்துகொண்டே விருந்தினரை வரவேற்கும் முறைமையும் திறமையும் அறியாமல் இருக்கலாம். அந்நேரத்தில் அவ்வீட்டுப் பெண்மணி வந்து, வந்தவரைத் தக்கமுறையில் வரவேற்று உணவு படைப்பாளேயானால் அவர்க்கு அவ்வீடு எவ்வளவோ அமைதியை அளிக்கும். பொலிவாகவும் காணப்படும். இதுபற்றியே பிச்சைக் காரர்களும் பிச்சை போடாத வீடு பெரிய மாளிகையா யிருப்பினும், இது என்ன வீடு' என்று குறைகூறிச் செல்கின்றனர். பிச்சை போட்ட வீடு கூரை வீடாயிருப்பினும், இந்த வீடு விளங்குவதாக என வாழ்த்திச் செல்கின்றனர். எனவே, பெண்மணிகள் விருந்தோம்பல் என்னும் விளக்காலும் வீடுகளை வெளிச்சம் பெறச் செய்கின்றார்கள் என்பது வெளிப்படை. ஆடவர் எளிமை: பெண்கள் ஊருக்குச் சென்றிருக்கும் நேரத்தில் ஒரு வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் வந்து விட்டதாக வைத்துக் கொள்வோம். அப்போது அவ்வீட்டிற்குரிய ஆடவர் வந்தவரைக் கண்டதும் அவ்வீடிருக்கும் எளிய தோற்றத்திற்குத் தாமே வெட்கப்படுகின்றார். அதனையறியாத விருந்தினர் சிறிது தண்ணீர் கொண்டு வாருங்கள்' என்று கேட்டு விடுகின்றார். உடனே வீட்டுக்காரர் கிடந்து விழிக்கின்றார். குடிதண்ணீர் சிறிது தூரத்திலுள்ள குளத்திலிருந்து