பக்கம்:வீடும் விளக்கும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 வீடும் விளக்கும் தன் காதலியோடு கலந்து சிற்றின்பம் நுகர்ந்த ஓர் ஆண்மகன், தான்பெற்ற இன்பத்தைப் புகழக் கருதி, அதனினும் சிறந்ததோர் இன்பத்தை அதற்கு உவமை யாகக் கூறலானான். அது வருமாறு: 'என் காதலி யோடு கலந்து யான்பெற்ற இன்பமானது, தம் சொந்த வீட்டில் (மனைவியுடன்) இருந்துகொண்டு தாம் தேடிய சொந்த உணவைப் பலர்க்கும் பகுத்துக் கொடுத்து உண்ணும் இன்பம் போன்றுள்ளது' என்பதே அவன் புகழ்மொழி. இக்கருத்து, திருக்குறள் காமத்துப் பாலிலுள்ள 'தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால் அம்மா அரிவை முயக்கு' என்னும் குறளில் நயம்பட நவிலப்பட்டுளது. பொறுப்பும் சகிப்பும்: மேலும், பெண்களை வீட்டின் விளக்காக விளம்பு வதற்குக் காரணம் வேறொன்றும் உண்டு. அது. ஆண்களைவிடக் குடும்பப் பொறுப்பும் சகிப்புத் தன்மையும் பெரிதும் உடைமையேயாகும். பெண் தாய் வீட்டில் செல்வ மகளாக வளர்க்கப்பட்டு வருகின்றாள். கணவன் வீட்டிற்கு வந்ததும் பெரிய பொறுப்புணர்ச்சி உடையவளாகி விடுகின்றாள். தாயினிடத்தில் கொஞ்சிக் கொஞ்சி விருப்பம் போன்றிருந்தவள். இங்கு எழுந்ததிலிருந்து தூங்கும் வரையும் கணவற்காகவும் குழந்தைகட்காகவும் ஒடியாடுகின்றாள். எவ்வளவோ வேலைகளைச் செய்து முடிக்கின்றாள். வீட்டுப் பொருள்களைச் சிதறாமல் காக்கின்றாள். கணவற்கும்