பக்கம்:வீடும் விளக்கும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 விடும் விளக்கும் அவனை வயப்படுத்திக் குடும்பத்தை விளக்கஞ் செய்ய வேண்டும். பெண்கள் முயன்றால் அது முடியும் என்பது உறுதி. எனவே வள்ளுவர் மனைவி, இளையான்குடிமாறர் மனைவி, கண்ணகி, மங்கையர்க்கரசி முதலிய பெண் மணிகளின் வரலாற்றை நோக்கின், பெண்கள் வீட்டின் விளக்காய் விளங்குவதோடு நாட்டின் விளக்காகவும் திகழ்கின்றார்கள் என்று சொல்லத் தடை யாதொன்றும் இல்லையல்லவா? பெண்களே நாட்டிற்குப் பெருவிளக்கம் ஆதலினால் பெண்களைத் தாழ்த்துவது பேதமையாம் அம்மானை நன்மக்களைப் பெற்று நாட்டிற்கு நலனளிக்கும் பெண்மக்கள் தமிழுணர்ச்சி பெறவேண்டும் அம்மானை. மணமக்கள் தேடுதல் பெண் வைத்திருப்பவர்களே! மாப்பிள்ளையிள் சொந்த வருமானத்தைக் கருதிப் பெண் கொடுப்பீராக! முன்னோர் சொத்தில் பிழைக்கும் தலையில்லாத முண்டங்களுக்குப் பெண் கொடாதீர்கள் என்று எச்சரிப்பதுபோல் தற் கொண்டான் வளம்” என்னும் தொடர் அமைந்திருக்கின்ற தல்லவா? பெண் பார்ப்பவர்களே! பணத்துக்காகவும் பளபளப்புக் காகவும் பெண் கட்டாதீர்கள்! பண்புக்காகப் பெண் கட்டுவீர்களாக என்று எச்சரிப்பது போல் 'மாண்புடைய வள்” என்னுந்தொடர் அமைந்திருக்கின்றதல்லவா? என்ன ՎՅlէՔ(3. - சுந்தர சண்முகனார்.