பக்கம்:வீடும் விளக்கும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பகுதி பெண்களின் விளக்கு விளக்கிற்கும் விளக்கு: விட்டின் விளக்கு பெண்கள் என்பது முதல் பகுதி யில் விளக்கப்பட்டது. இனி அவ்வீட்டின் விளக் காக்கிப் பெண்களை விளக்கமுறச் செய்வது எவ் விளக்கு? என்பது இவ்விரண்டாம் பகுதியில் விளக்கப் படும். என்ன! ஒரு விளக்கால் மற்றொரு விளக்கு விளக்கம் பெறுவதும் உண்டோ எனின், ஆம் உண்டு. கூர்ந்து நோக்கின் உண்மை விளங்கும். ஞாயிறாலேயே (சூரியனால்) வெண்ணிலா (சந்திரன்) விளக்கம் பெறு கின்றது. மற்றும், நம் கண்களாகிய விளக்குக்களும் பகலில் ஞாயிறாலும் இரவில் வெண்ணிலாவாலும் விளக்கம் பெறவில்லையா? அவ்வளவு ஏன்? நம் வீடு களிலேயும் ஒரு விளக்கைக் கொண்டு தானே மற்றொரு விளக்கை ஏற்றுகின்றோம். எனவே, வீட்டின் விளக் காகிய பெண்களை விளக்கும் வேறொரு விளக்கும் உண்டு என்பது உணரக்கிடக்கின்றது. அதனைப் பின்வரும் சிறு கதையின் வாயிலாக நன்கறியலாம்: சிறுகதை: செல்வக் குடும்பத்தைச்சேர்ந்த பெண்ணொருத்தி. வயது முப்பது இருக்கலாம். தன் கணவனுடன் திருப்