பக்கம்:வீடும் விளக்கும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 77 தில்லை. ஆனால், இவ்வளவு துன்பங்களும் தம்மைத் தாக்கும் என்பதை முன்னதாகவே அறிந்து வைத்தும், தமக்குப் பிள்ளை பிறக்க வேண்டுமென்று ஆவல் கொள்வதில்தான் வியப்புள்ளது, பிள்ளைகளைப் பெண் கட்கு விளக்காகக் கூறுவதும் இதுபற்றியே. ஆனால், பெண்கள் தம் கணவரால் பெறும் சிற்றின்பத்திற்காகவே இங்ங்ணம் ஆவல் கொள்கின் றார்கள் எனப் புல்லிய எண்ணங் கொள்வது பெரிய மடமை. இங்குக் குறிப்பிடப்படும் ஆவல் அஃதன்று. அச்சிற்றின்பந்தான் மணமான பின் இயற்கையாகவே அமைந்து கிடைக்கின்ற தல்லவா? ஆதலின், தம் வயிற்றில் கருதங்கிக் குழந்தை பிறக்கவேண்டும் என்ற ஆவலே இங்குக் குறிப்பிடப்படுவ தாகும். மேற்கூறிய துன்பங்களில் ஒன்றாயினும் ஆண்கட் கில்லை. தாயால் வளர்த்து உருவாக்கப்படும் பிள்ளை, பின்னால் பொருளீட்ட (சம்பாதிக்க) வரும்வரையும் தாம் பொருளீடடவேண்டிய துன்பம் ஒன்றுமே ஆண்கட் குண்டு. பிள்ளையில்லாவிட்டாலும் அவ் வேலையை ஆண்கள் செய்து தானே தீரவேண்டும். ஆனால் சில குடும்பத்தில் பெற்ற பிள்ளை கொடியனாய் இருப்பனேயாகில், தான் கேட்ட பொருளை வாங்கித் தரவில் லயென்றோ, விரைவில் திருமணம் செய்து வைக்கவில்லையென்றோ தந்தையை அடிப்பதும் உண்டு. அந்த அடிவாங்கும் துன்பம் வேண்டுமானால் சில தந்தைமார்கட் கிருக்கலாம். அது எங்கேயோ ஒன்று. ஆகவே, ஆண்களைவிடப்