சுந்தர சண்முகனார் 93 கடிவாளமாவதும் உண்டு; பெண் பிள்ளைகள் இனிய புல்லாவதும் உண்டு. இவையெல்லாம் நம் விருப்பு வெறுப்புக்குக் கட்டுப்பட்டன அல்லவே. வாழ்க்கையில் எது வரினும் தளராமல் ஏற்பதுதானே (வீரம்) பெருமிதம்? அங்ஙனம் பெண்ணின்றி அனைவர்க்கும் ஆணே பிறக்குமாயின், உலகம் மேலும் மேலும் வளர்ச்சியுறுவது எங்ங்ணம்? ஆதலின், பெண் குழந்தையை வெறுக்கும் பேதைமையை அடியோடு அகற்றிக் களையவேண்டும். ஆண்கள்மட்டுமா வெறுக்கின்றார்கள்? சில பெண்களும் தம் இனமாகிய குழந்தையை வெறுக்கின்றார்கள். அதுதான் வியப்பாயுளது. ஆசைக்கொரு பெண்: ஆனால், சிலர்மட்டும் பெண் பிறந்தாலும் வெறுப்பதில்லை. அப்பெண் குழந்தைக்கு விலையுயர்ந்த ஆடையணிகள் அணிந்து அழகு பார்க்கின்றனர். மணம்செய்து கொடுத்து மகிழ்ச்சி யெய்துகின்றனர். மருமகன் வந்துவிட்டால், மருமகன் ஆசை மட்டற்ற ஆசை என்றபடி மனங்கோணாமல் நடக்கின்றனர். உணவு முதலிய பல்வகைச் சிறப்புக்களாலும் அவனை மகிழச் செய்கின்றனர். அதன் காரணம் அவன்மேல் உள்ள அன்பா? அல்லவே. உண்மைக் காரணம் கண்ணான தம் பெண்ணன்பே யன்றோ? பெண்ணைக் கொடுத்தோமோ கண்ணைக் கொடுத்தோமோ என்னும் முதுமொழியும் இதனை உறுதிப்படுத்து கின்றது. எனவே, எப்பிள்ளையாயினும் விரும்பி