பக்கம்:வீடும் விளக்கும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. வீடும் விளக்கும் ஏற்கவேண்டும் என்பது இனிது விளங்கும். குறைந்தது. ஆணொன்று பெண்ணொன்றாயினும் இருக்கலாமே. இக்கருத்தை ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆத்திக்கு (ஆஸ்தி-சொத்து) ஒர் ஆணும் என்னும் தொடர் மொழி வலியுறுத்துகின்றது. இவ்வாய்ப்பாயினும் கிடைக்கப் பெறார்க்கு வாழ்க்கையில் பயனென்ன உளது? அவர் வீடு வெற்றிடமே. பல்லாண்டுகளாகப் போரும் பிணக்குமாக விளக்கமின்றிக் கிடந்த வீடுகள் சில, இரண்டொரு குழந்தை ஏற்பட்டதும் அமைதியும் விளக்கமும் அடைவதை நாம் காணலாம். வளர்க்கும் முறை: ஆனால், அவாவுக்குப் பிள்ளை பெற்றுவிடுவது மட்டும் போதுமா? நன்முறையில் வளர்க்கவும் தெரிய வேண்டும். அப்போதுதான் அப்பிள்ளைகள் பெற்றோர்க்குப் பயன்பட்டு விளக்கம் செய்வார்கள். "தாயெப்படி மகளப்படி, தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால் மகளை வீட்டில் பார்க்க வேண்டியதில்லை' என்னும் பழமொழிகள் அறிவிப்ப தென்ன? பெற்றோர்களின் குணமே பிள்ளைகட்கும் இருக்கும் என்பது இவற்றால் விளங்கவில்லையா? எனவே, பிள்ள்ைகள் ஒழுங்காய் இருக்க வேண்டுமானால் பெற்றோர்களும் ஒழுங்காய் இருக்க வேண்டும். அதிலும், உடனிருந்து வளர்க்கும் உரிமை பெற்ற தாய் முதலில் ஒழுங்காய் இருக்கவேண்டும், சில பிள்ளைகள் தாய்மார்களின் தீக்குணங்களைக் கண்டு தாமும் பழகிக்கொள்கின்றனர். கண்ட