13. பாசறையில்
117
கிறது! எல்லோரும் அதைச் சுற்றி உட்கார்ந்திருக்கிறார்கள்.
ஆடும் மகளிர் யாழைச் சுருதி சேர்க்கப் பார்க்கிறார்கள். குளிரால் அது பதம் கெட்டிருக்கிறது. அதைத் தம் மார்பிலே தடவிக்கொண்டு அந்தச் சூட்டில் சுருதி சேர்க்கிறார்கள். கணவன்மாரைப் பிரிந்த மகளிர் தனிமைத் துன்பம் பொறாமல் வருந்துகிறார்கள்.
இவ்வாறு கூதிராகிய பருவம் தன் இயல்பைக் காட்டிக்கொண்டு நிலவுகிறது.
அரசி அரண்மனையில் படுக்கையில் கிடக்கிறாள். தன்னை அலங்கரித்துக் கொள்ளாமல், பாண்டிய மன்னன் பிரிந்து போர்க்களத்துக்குச் சென்றிருத்தலால் பிரிவுத் துன்பத்தால் வருந்துகிறாள். அருகில் தோழிமார்கள் அவன் காலை வருடிக்கொண்டிருக்கிறார்கள், வயசான மூதாட்டியர் பல வகையான கதைகளைச் சொல்லிப் பொழுது போக்க முயலுகிறார்கள். "உன் கணவர் இதோ வந்துவிடுவார்!" என்று தேறுதல் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
அங்கே, போர்க்களத்தில் பாடி வீடு அமைத்துக் கொண்டு வீரர்களோடு தங்கியிருக்கும் அரசன் எப்படி இருக்கிறான்?
யானைகளை வேலாலும் வாளாலும் துணித்து வென்ற வீரர் பலர் பாசறையில் முகத்திலும் மார்பிலும் புண்ணையுடையவராகிக் கிடக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும் பொருட்டு அரசன் தன்னுடைய கூடாரத்திலிருந்து புறப்படுகிறான். இரவு நேரம், அங்கங்கே வட்ட வட்டமான விளக்குகளில் பருத்த திரிகளையிட்டு ஏற்றியிருக்கிறார்கள். வடக்கிருந்து வரும் வாடைக் காற்று வீசுகிறது. அப்போதெல்லாம் விளக்கிலுள்ள சுடர்கள் தெற்குப் பக்கமாகச் சாய்ந்து ஒளி விடுகின்றன. அரசனுக்கு முன்னாலே