வீரகாவியம்
138
கொண்டதொரு வஞ்சனையால் ஐயி ரண்டைக்
கூடிவரும் ஆயிரமாம் வீரர் சூழ்ந்து மண்டுபெரும் படையொன்றைத் திரட்டித் தந்து
மாவலியன் தடவலியன் என்பார்க் கூவித் 'தண்டுகொண்டு கோளரிக்குத் துணையாய் நின்று சமர்புரி'கென் றிருவர்க்கும் ஆணை யிட்டான்; தொண்டுபுரி படைத்தலைவ ரவரை நோக்கித்
துணைபுரியச் செல்லுமவர்க் கொன்று சொல்வான். 274
'படைத்தலைமை கொண்டுள்ளிர்! வயந்தர் தந்த
படைக்குரிய கோளரிதான் யாவன் என்று படைத்துணர வல்லிரோ? நமது நாட்டின்
பகைவன்மா வேழனுக்கும் வயந்தன் பெற்ற இடைக்கொடியள் வேல்விழிக்கும் பிறந்த செல்வன்;
இதுபிறர்க்கு மறைபொருளா வுள்ள தென்று கிடைத்துளது செய்தியொன்று; போரில் வேழக்
கிழவனுக்கு நிகராவான் என்றும் சொல்வர். 275
நமதுபெரும் படைத்துணையும் இன்று பெற்ருன்
நானிலத்தில் எவர் பொரினும் எளிதில் வெல்வான்; எமனனைய மாவேழன் வாழ்வால் தோல்வி
ஏலாத மூவகத்தைத் தோற்கச் செய்வான்; சமர்புரியும் மதலைக்கு வேழன் போலத்
தனிமதலை இவன் நமக்கு வாய்த்தான்; நல்ல சமயமிது; இவ்வமரில் நமக்கே வெற்றி
சார்ந்துவிடும் ஐயமில திண்ணம் திண்ணம். 276
தண்டு-சேனை பொரினும்- போர்செய்தாலும் மதலைக்கு-மதலைக் கோமானுக்கு. i o