பக்கம்:வீர காவியம்.pdf/162

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159

மகப்பெறு படலம்



இயல் 70 மறுநாள் கோட்டை வாயிலுட் புகுந்தோன் பொருவாள் விழிமகட் கண்டிலன் புலம்பினன். துயிலரசு செயுமிரவு புறந்தந் தோடத் துதையிருளின் வாய்பிளந்து கதிரோன் தோன்ற அயிலரசின் இலைவேலான் படைதி ரட்டி ஆர்ப்பரித்து வெண்கோட்டை வாயில் சார்ந்தான்; எயில்வளையும் நெடுங்கதவின் வாய்பி ளக்க இடித்ததனுட் புலிபோலப் பாய்ந்து சென்ருன்; பயில்பு விங் கொருவருமே காணு கிைப் பகரரிய ஏமாற்றங் கொண்டு நின்ருன். 3.18 காணுருங் கேளாருங் கூனர் தாமும் கைகால்கள் முடமாகிச் செயல்செய் யாரும் பேணுர்தங் கோட்டைக்குள் இருக்கக் கண்டான் ; பேருலையின் வெய்துயிர்த்தான்; வீரம் ஒன்றே பூணுகக் கொண்டவளைத் தனது நெஞ்சுட் புக்கதனைக் கவர்ந்தவளைத் தேடித் தேடிக் காணுமல் பதைபதைத் தான்; ஏதோ ஒன்று கவ்வியது போல்மனத்தில் துடிது டித்தான். 3.19 - - -- _ துதை-செறிந்த அயில்-கூரிய அரசின் இலை-அரசமரத்திலே . எயில்-மதில் பயில் வர்-வாழ்பவர். உலையின்-உலையைப்போல .