பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 8 {} நடிப்பின் மூலம் கோடி, கோடியாகச் சம்பாதித்துக் குவித்த பிரபல பணக்கார நடிகை! அவளுடைய நிர்வாணப் படமொன்றைக் காலண்டராக அச்சிட்ட ஒருவன் கோடி கோடியாக இலாபம் சம்பாதித்தான். இளமைப் பருவத்தில் மர்லின் மன்றோ சுமார் பன்னிரண்டு இடங்களில் வளர்க்கப்பட்டவள். மதுப் புட்டிகளைத் தொடுவதே பாபமென்று போதித்தனர் முதல் குடும்பத்தினர். மதுப் புட்டிகளுடன் விளையாட விட்டனர் இரண்டாவது குடும்பத்தினர். இன்னொரு குடும்பத்தில் அவள் வளர்ந்தபோது 'திருடி எனப் பட்டம் சூட்டப்பட்டாள். அந்த வீட்டின் தலைவி விலையுயர்ந்த முத்தாரத்தைத் தொலைத்து விட்டாள். மர்லினுக்கு முத்தாரமென்றால் எப்படியிருக் கும்-அதன் மதிப்பு என்ன வென்பது கூடத் தெரியாது. ஆனால் முத்தாரத்தைத் திருடிய குற்றம் அவள்மீது சுமத்தப்பட்டது. அவள் அதற்காகத் தண்டனைக்குள் GIF frĘŠTIT GYT. 0 நூல்: மர்லின் மன்றோ வாழ்க்கை வரலாறு (1962) பதிப்புரை பக்கம் - 1, 8, 10, 11. நூலாசிரியர்: ஆரூர் அமுதா வால்மீகி வால்மீகி-வட மொழியிலே ராமாயணஞ் செய்த வித்துவ சிரேஷ்டர். கிராதர் தொழிலை மேற்கொண்டு காட்டிலேயிருந்து வழிப்போக்கர்களை அலைத்து அவர் கள் பொருளைக் கவர்ந்தொழுகும் நாளில், நாரதர் கண்டு ஞானோபதேசம் பண்ணி அவரை நல்வழிப் படுத்தினர். அதன் பின்னர் மகா தவசிரேஷ்டராகி ராமாயணத்தை இயற்றி முடித்தார்.