பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 அவள், அவர்கணக்கில்லாத படிமுத்தமிட்டதாக முறைப் பாடு செய்தாள். கோர்ட்டார் ஒரு நாளைக்குப் பத்துத் தரம் அதாவது மத்தியானம் வரை 5 முத்தமும் இராச் சாப்பாட்டுவரை 5 முத்தமும் இடவேண்டுமென்று உத்தரவு கொடுத்தாராம். அவள் புருஷனும் அவ்வுத்த ரவுக்குக் கீழ்ப்படிந்து கையெழுத்துப் போட்டாராம். 0 இதழ் : வித்தியாபாது, விரோதிகிருது ஆடி (1912), தொகுதி-3, பகுதி-4. அம்பர் நாட்டரசன் மனைவி அம்பர் நாட்டு அரசனாகிய பேர் பெற்ற ஜயசிங் என்பவன் கோட்டா நாட்டரசன் மகளை மணம் புரிந்து கொண்டான். ஒருநாள் ஜயசிங் தன் மனைவியுடன் தனித்திருந்த சமயத்தில் அவளது உடையைப் பார்த்து, * இது என்ன உங்கள் வீட்டார் தங்கள் உடையை இவ் வளவு தூரம் பெருகவிட்டிருக்கின்றார்கள். எங்கள் மாதரது உடைகள் எவ்வளவு கச்சிதமாயிருக்கின்றன. பார்’ என்று விளையாட்டாகச் சொல்லிக் கொண்டு ஒரு கத்திரிக்கோலைக் கையிலெடுத்து ஏன் இதைச் சரியாகக் கத்தரித்து விடக்கூடாது?’ என்றான். தனது பிறந்த வீட்டாரை இங்ங்னம் ஏளனம் செய்வதைச் சகி யாதவளாய் உடனே அவள் தன் நாயகனுடைய வாளைப் பிடுங்கிக் கொண்டு, "இனி எங்களை இம்மாதிரியாக அவமதித்தால் நீங்கள் அக்கத்திரிக்கோலை உபயோகப் படுத்துவதைவிட அதிக சாமர்த்தியத்துடன் கோட்டா நாட்டரசன் மகள் இவ்வாளை உபயோகப்படுத்துவாள். வெ-4