பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

கள். இனிப்பு முலாம் பூசப்பட்ட கசப்பு மாத்திரை களாகவும் பலர் காட்சி தந்திருக்கிறார்கள். இத்தகைய 'பெருமைக்குரியவர்களை வெட்ட வெளிச்சம்' என்னும் இத் தொகுப்பு நூலின் வாயிலாக அடையாளம் காட்டி -யிருக்கிறார் உவமைக் கவிஞர் திரு. சுரதா அவர்கள்.

உவமைக் கவிஞர், கவிதைக் கணிச் சாறு வடிப்பதில் மட்டுமல்ல, கட்டுரைத் தேன் பொழிவதிலும் பெருந் திறன் பெற்றவர் என்பதைத் தமிழ் கூறு நன்னுலகம் நன்கறியும். மகாகவி பாரதியார் கவிதையும் உரை நடையும் வழங்குவதில் வல்லவராக விளங்கினார். அவரது சீடர் பாவேந்தரும் அவரைப் போலவே திகழ்ந்த துடன், நாடகம் ஆக்கவும் திரைப் பட உரையாடலைத் தீட்டவும், திரைப் பாடலை யாக்கவும் திறம் பெற்றிருந் தார். அவரது சீடரான சுரதா பாவேந்தரைப் போலவே இலக்கியத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் பேராற்றல் பெற்று விளங்குகிறார். பாவேந்தர் தொட்டுப் பார்க் காத - தொகுப்புத் துறையிலும் நுழைந்து தமது ஒப்பற்ற திறமையை உலகுக்கு உணர்த்துகிறார் சுரதா.

வெட்ட வெளிச்சம் என்னும் இந்நூலில் உள்ள பன்னிரண்டு உட்பிரிவுகளின் வாயிலாகப் பல்வேறு அரிய தகவல்களைத் தந்திருக்கிறார்.

மொத்தத்தில், நட்ட நடு நிசியில் வாழ்ந்த சிலரைப் பட்ட பகலுக்கு இழுத்து வந்து அவர்களது வாழ்க்கை நிகழ்ச்சிகளை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது இந்

பல நூ தான் இந்:

'ు

ல்களில் உலா வந்த செய்திகளின் தொகுப்பு ல் என்றாலும், படிப்பதற்கேற்ற முறையில்

நெடி மல் சிறிது சிறிதாகத் தரப்பட்டிருப்பது நாலு பைச் சேர்க்கிறது.