பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதியமான் நெடுமான் அஞ்சிஒளவையார் தகடூரில் இருந்து நல்லாட்சி புரிந்த அதியமான்களில் நெடுமான் அஞ்சி மிக்க புகழ் படைத்தவன். தன்னை யுண்டாரை நெடிது வாழப்பண்ணும் நெல்லிக்கனியை ஒளவையார்க் களித்துப் பெருநலம் செய்தவன். அதியமான் இறந்தபின் ஒளவையாரை யுள்ளிட்ட சான்றோர் கூட்டத்தில் அஞ்சியின் கொடை நலமும், புலவர் முதலியோரை அவன் பேணுந் திறமும் பொருளாகப் பேசப்பட்டன. ஒளவையார் அவனோடு இருந்து அவனது வள்ளன்மையைத் தெளிய அறிந்திருந் தாராதலின், அதனை பாட்டின் கண் விரியக் கூறியுள்ளார். சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே