பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 வெற்றி மேல் வெற்றி பெற.

ஆனால், அவன், அந்த வழியே என்றும் நிலைத்திருக் கும் ஆறுதல் நிலையை அடைவான்.

அறிவூட்டல்

ஆசான்

பணிவானவர்க்கும், புரிந்து கொள்வதற்கு விருப்பமான வர்க்கும், அதற்கு அணியமாகவுள்ளவர்க்கும்

வெளிச்சத்தை கூர்ந்து அறிவதற்காக இருளில் அலைந்து கொண்டிருப்பவர்க்கும்

இப்போது வந்து கேளுங்கள்; மகிழ்ச்சி அடையுங்கள்; தூய்மை ஆரவாரத்தில் வந்து சேருங்கள், உணர்வுகளினால் ஆசான் தெரியமாட்டார், காரணத்தினால் புரிந்துகொள்ளப்பட முடியாதவர், தருக்கத்தினால் உணர்ந்து கொள்ள முடியாதவர்.

மலைகளிலோ, பள்ளத்தாக்குகளிலோ அவரைப் பார்க்க முடியாது. *

மண்ணிலோ விண்ணிலோ வேறு எந்த வெளிப்படை யான பொருள்களிலோ காண முடியாதவர் அவர்.

கொள்கைகள், கழகங்கள், நூல்கள்-இவை எவையும் அவரை தன்னகத்தே வைத்திருக்க முடியாதவர்.

அவர் தன்னுள்ளே வாழ்பவர்.

ஒ சோர்வுற்றவனே! நீ வெளிப்புறத்தே தேடுவதை விட்டுவிடு!

இரவுகளின் குழந்தையே! நீ அலைந்து திரிவதை விட்டுவிடு!