26 வெற்றிமேல் வெற்றி பெற...
அழித்து போகும் ஆசைகள், வெற்று இன்பம் போன்ற வற்றின் இழப்புகள் பற்றி தன்னலம் அச்சமூட்டிக் கொண்டு இருக்கும்போது, எப்படிக் கடைத்தேற்றம் ஏற்றப்பட்டுப் பேரின் பத்திற்குள் புக முடியும்?
தன்னலமே இருண்ட வாழ்விற்கும் துன்பத்திற்கும் வழியாக அமைகின்றது.
மீட்கப்பட்டவர்கள் தன்னலத்தை தொலைவில் வீசி விட்டு உண்மையை ஏற்றுக் கொண்டவர்கள்.
மகிழ்ச்சியூட்டும்போது, தன்னலமானது தவற்றையும் உண்மையைப் போல் மதிப்பு அளிக்கிறது;
வெறுப்பு ஏற்படும்போது உண்மையைத் தவறு என மதிக்கிறது.
இன்பத்தைத் தேடுவதாலும், துன்பம் பற்றி அச்சம் அடைவதாலும் தன்னலத்திற்கு எது நல்லது? எது கெட்டது எனத் தெரிவதில்லை.
உண்மை ஒன்றினால் மட்டுமே உண்மையை உண்மை யாகவும், தவற்றைத் தவறாகவும் அறிய முடிகிறது;
இன்பம், துன்பம்-இவற்றைப்பற்றிக் கருதாமலே அது தீமையை நீக்குகிறது.
இறை அன்பே உண்மையின் நிறைமலர்;
ஏனெனில், நெஞ்சத்தில் உண்மை நிரம்பும்போது: வாழ்வில் அன்பு மலர்ந்து மணம் பரப்புகிறது.
இந்த மலரினால் உண்மை அறியப்படுகிறது;
ஏனெனில், எங்கெல்லாம் நடுநிலை தவறாத அன்பு நிலவுகிறதோ, அங்கெல்லாம் உண்மையும் உள்ளது.
நேர்மையான செயல்கள், தூய்மையான செய்கைகள், தன்னலம் அற்ற தொழில்கள், கட்டுப்படுத்தப்பட்ட அமைதியான மனங்கள்