பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வெற்றி மேல் வெற்றி பெற.

4

மெய்யாக எல்லாவற்றிற்கும் இணக்கம் ஏற்படும்போது அமைதி காத்திருக்கிறது.

உண்மையின் கதவு திறந்திருக்கிறது. தடை செய்ய யாருமில்லை, ஆனால் மனிதன் பின்னே நின்று அதைத் திறக்க விடாமல் பிடித்துக் கொண்டு நிற்கிறான்.

அப்படி அவன் பிடித்துக் கொள்வது சில காலத்திற்கே. ஆனால், பயன் பெறும் காலம் வரும்போது அவன் முன்னே வருகின்றான்.

யார் முன்னால் வருகின்றானோ அவன் வரட்டும்! அவன் வந்து சேர்ந்து மகிழட்டும். எல்லாமே இருப்பது இப்பொழுதுதான்். எல்லா வெளிச்சம், எல்லா அறமுறைக் கட்டளைகள், எல்லா உண்மைகளும் இப்போதே.

காலமும் என்றும் நிலைக்கும் தன்மையும் ஒன்று? பொருளும் ஆற்றலும் உண்டு; இறப்பும் பிறப்பும் ஒன்று; குருடர்களுக்கு இது புலப்படுவதில்லை. ஆனால், கண்களை உடையவர்கள் தாங்கள் காண்ப வற்றை அறிந்து கொள்கிறார்கள்.

நாம் முயற்சி எடுப்பதில்லை. நாம் தொலைவில் நின்று பேச்சற்றிருக்கிறோம். சில நேரங்களில் மட்டும் மனிதர்கள் அங்கும் இங்கு மாகப் பரபரப்பில் அலைகின்றனர்.