பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 வெற்றிமேல் வெற்றி பெற.

தீமையின் முடிவுகளிலிருந்து தப்பிவிட முடியாது; புகலிடமில்லை, பாதுகாப்பும் இல்லை. ..

நல்லவர்களாக இருந்தால், எம்மைத் தூக்கி எறிய என்ன இருக்கிறது?

துன்பத்திற்கும் குழப்பத்திற்கும் எம்மை ஆளாக்குவது எது?

மனிதனோ, மங்கையோ, வறுமையோ, நோயோ, விண்ணுலகோ, மண்ணுலகோ-எதுவும் நம்மை குழப்பத் திற்குள்ளாக்காது.

காரணம் தான்் மறக்கப்பட்டாலும், நல்லவற்றின் விளைவுகள் தோற்றம் அளிக்கும்,

அதன் புகலிடமும் பாதுகாப்பும் கையிலே உள்ளன.

தாயத்துகளும் மந்திரங்களும் என்ன பயனை அளிக்க உள்ளன?

ஒழுங்கு செய்யப்பட்ட வழிபாடுகளின் முணுமுணுப்புக் தான்் பயனை அளிக்குமா?

பொதுவான சடங்குகளைக் கடைப்பிடித்தால்தான்் பயனை அளிக்குமா?

இவற்றால் பயனை அளிக்க முடியாது, இவை வெறுமையானவை.

இவை ஆற்றலற்றவை; பாதுகாப்பதற்கு முடியாதவை.

நேர்மையே பயனளிக்கிறது.

நல்ல செயல் புரிவது பயனை அளிக்கும்.

தூய்மையான உள்ளமும் குற்றமற்ற வாழ்வும் பயனளிக்கும்.

அவை மகிழ்ச்சியாலும் நட்புறவினாலும் நிரப்பப் பட்டவை.