பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்கு ? மாறுபட்ட வாதமே ஐந்நூறு வாயில் நீள ஓதுவாய் போ, போ, போ என்று எங்களே இகழ்ந்தாரோ ? அல்லது எங்கள் கிலேக்காக, நல்லதோர் விணசெய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ என்று எண்ணி இரங்கினரோ ? இக்காட்டில் நாம் சோற்றுக்கு அடிமையாயும் சுயநல மிகுந்தும் சுதந்திரமிழந்தும் சோர்ந்து வாடி வீழலாகாது. சோர்வும் வீழ்ச்சியும் தொண்டர்க் கில்லை. அப்படியே ஒரு சமயம் சோர்வு தோன்று மால்ை அதை மாற்ற ஒரு சஞ்சீவி மருந்து கூறு வேன். உடனே பாரதியார் படத்தைப் பாருங்கள். படம் ப. க் க த் தி ல் இல்லையானல், அவர் முகத்தை அவர் வேலொத்த விழிகளே - எண்ணிப் பாருங்கள். உடனே பாரதியார் பார்வை, இராம பாணம் போல் பாய்ந்து, உங்கள் மனத்தில் எங்கிருக் தாலும் சோர்வையும், அச்சத்தையும் தேடிக் கொன்றுவிடும். புத்துயிர் பெறுவீர்கள் என்பது நிச்சயம்.