பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16. ஆத்திரத்தின் ஆவேசம்


குணசேகரின் மனைவி கேட்ட கேள்வியில் நியாயம் இருந்தது. அது அவருக்கு வேதனை தருவதற்குப் பதிலாக விவேகத்தை அளிப்பது போல் இருந்தாலும், விளக்கம் தருவதாக அமையவில்லை.

‘நிலம் பார்த்து விதைக்கவேண்டும், பாத்திரம் அறிந்து பிச்சையிடவேண்டும். குலம் பார்த்து பெண் கொடுக்க வேண்டும்.’

இதெல்லாம் சொல்வதற்கும் கேட்பதற்கும் நன்றாகத்தான் இருக்கிறது. செயல்படும் பொழுது எப்படி முன்னதாக தெரியும்?

வாய்க்குள்ளே சோறு போன பிறகுதானே கல்லும் முடியும் இருப்பது தெரிகிறது! முன்னாலே தெரிந்து கொண்டால் எடுத்து விடலாம்! வாய்க்குள்ளே போனபிறகு தானே தெரிகிறது என்றால் என்ன செய்வது?

அழகாக வாரிவிட்டுக் கொள்கின்ற முடி உதிரும் என்று நமக்கு எப்படி தெரியும்? எப்பொழுது புரியும்? விழுந்த