இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கவிஞர் வெள்ளியங்காட்பான்
புல்
எமதெம தெனவே பேசி
இங்குள்ள பொருளை யெல்லாம்
தமதாக்கும் வழக்கத் தால்தான்
தரணியாழ் படுவதாகும்
நமதுவாழ் நாளி லேனும்
நலன்பொலன் பங்கி யொன்றிச்
சமத்துவ மாக வாழ்ந்தால்
சத்தியம் தழைக்கும் சற்றே !
காலத்தைக் கலகஞ் செய்து
கழித்தென்ன பயனைக் கண்டோம் !
ஞாலத்தில் பிறந்த வெல்லாம்
ஞாலத்தில் வாழத் தானே !
சீலத்தை மறந்து சிந்தை
செருக்கினை வளர்த்தோ மாயின்
மூலத்தோ டழிவோ " மென்றே
முடித்தது கதையைப் புல்லே !
133