இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கவிஞர் வெள்ளியங்காட்டான்
என்ன எண்ண வேண்டும் ? இனி நான்
என்ன பேச வேண்டும் ?
என்ன கேட்க வேண்டும் ? - இனி நான்
என்ன செய்ய வேண்டும்
நினைவு கூறு கின்றேன் - பிறர்முன்
நின்று வினவு கின்றேன் !
மனித னாய்ப்பி றந்தோன் - மலர்போல்
(என்ன)
அண்டி னோரை யண்டி - யணைத்தே
ஆத ரிக்க வும், கற்
கண்டு போன்ற சொற்கள் - கூறிக்
(என்ன)
பசுமையான பயிர்கள் - வெயிலால்
பரித விக்கும் போது,
விசும்பி னின்று வீழும் - மழையாய்
(என்ன)
பொன்ன விர்ந்த மேனி - புதுமை
பூத்தொ ளிர்க ருங்கண்
சின்னஞ் சிறுகுழந்தை - யெனவே
(என்ன)
இனிமை யான தென்றல் - அதிலும்
இனிமை யான நிலவு,
இனிமை யான இசையாய் - உலகை
(என்ன)
'கன்றை யீன்ற மாடு - குஞ்சைக்
காத்தி டுங்க போதம்'
என்று கூறு மாறாய் - மக்கட்
(என்ன)