பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளி விழா

79


மக்களும் முன்னேறுகிறார்கள். எனவே இந்நாட்டின் குடிமக்கள் அனைவரும் யார் ஆள்கின்றார்கள் என்றோ நாட்டை வழிப்படுத்துவது ஆளுகின்றவர்களின் பொறுப்பு என்றோ நினைக்கக்கூடாது. எனவே, நாட்டு மக்களுக்கு நாட்டுப்பற்று இருக்குமேயானால், தன்னுடைய கடமையைச் செய்வார்களேயானால், எதிர்கால இந்தியா உலகநாடுகளிடையே போட்டியிடுகின்ற அளவிற்குச் சிறக்க முடியும், எப்பேர்ப்பட்ட அறிஞர்களைப் பெற்ற நாடு நம் நாடு என்பதை உலகநாடுகள் சொல்லுகின்றன. இன்றைக்கு இந்தியாவில் பட்டம் பெற்று வெளிநாடு சென்றவர்கள் பல துறைகளில் புகழ் பெறுவதை நாம் பார்க்கிறோம்.

எனவே, இளைய தலைமுறையினராகிய நீங்கள் நாடென்ன செய்தது நமக்கு என்று கூறிக் கொண்டு காலம் கழிக்காது, ‘நாம் என்ன செய்தோம் நாட்டிற்கு!' என்று ஜான் கென்னடி கூறிய கருத்தினை மனத்தில் கொண்டு கடமையாற்ற வேண்டும் என்று இங்குப் பட்டம் பெற்றவர்களைக் கேட்டுக் கொண்டு வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்!