பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

வள்ளியம்மாள் கல்வி அறம்


ஆழத்திலே இருக்கக்கூடியவர் யாரென்று சொன்னால் அது தாய்மைதான்; அது பெண்மைதான்; தன் தாயின் பெயரால் உருவாக்கப்பட்ட இக்கல்லூரியை நிச்சயமாகப் பாராட்டத்தான் வேண்டும்.

கல்லூரிக்குக் கல்லூரி, மாணவர்களுக்கு மாணவர்கள், இடத்துக்கு இடம் மாணவர்களின் இரசனை மாறுபடுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலே நம் கல்லூரியில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, சீரிய கருத்துக்களை மாணவச் செல்வங்களிடையே வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தகு கல்லூரி, சீரும் சிறப்பும் பெறவேண்டும். மேன்மேலும் பல துறைகளைப் பெறவேண்டும்.

நிறுவனரின் அயராத உழைப்பு, அன்னை வள்ளியம்மாளின் ஆசியோடு கோடிக்கணக்கான தாய்மார்களின் எண்ணங்களோடு இந்நிறுவனம் மேலும் மேலும் சிறக்கும், அதற்கு என்னாலான உதவியைச் செய்வேன் என்று கூறி என் உரையை முடிக்கின்றேன். நன்றி! வணக்கம் !