இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
23.வெள்ளை யானை
மன்மதத் தேராக
அகலிகையின் அணிவகுப்பு.
உடனே-
அந்த அதிசய மலர்மீது
ஆயிரம் வண்டுகள்
மொய்த்தன.
அவள் கண்வண்டுகளோ,
ஆவலோடு
இந்திரன் பக்கம்.
'உலகை
யார் முதலில்
வலம் வருகின்றாரோ
அவருக்கு உரியவள்
நான் -
தவமிருந்து பெற்ற
தங்கப் பதக்கம்' -
என்று முக்தல முனிவன்
முன்னறிவிப்புச் செய்தான்.
ஒரு பெண்ணின்
காதல் சுதந்தரம்
பந்தயப் பொருளாக
மாற்றப்பட்டது.
வெள்ளை யானை மீதேறி
வேகமாகப் பறந்தான் இந்திரன்.
பசுவை வலம்வந்து
பரிசுக்குக் கை நீட்டினான்
கெளதவ முனிவன்.
பதக்கத்தின்