பக்கம்:வெள்ளை யானை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முருகுசுந்தரம் 70



விரல்கள்
இரத்தம் சிந்திய போதும்
மீட்டுவதை
அவன் நிறுத்தவில்லை.
பைஜுவின் பாட்டும்
ஆர்ஃபிசின் யாழுமாக
அதுகல்லையும் உருக்கியது; இறந்தவர்களையும்
உயிர்ப்பித்தது.

அந்த
இசைக் காந்தத்துக்குக்
கட்டுப்பட்டு
வாமனர்கள்
வானளாவி
வளர முடிந்தது.

சுட்டு விரலால்
ஆதிக்க கிரியைத்
தூக்கி
நிறுத்த முடிந்தது.

இந்த நாடு
மறுமலர்ச்சி பெற
அந்தக் காந்த இசை
மீண்டும் வேண்டுமாம்!

ஆனால் -
மீட்டவல்ல
கலைஞன் யார்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/60&oldid=1312644" இலிருந்து மீள்விக்கப்பட்டது