இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முருகுசுந்தரம் 70
விரல்கள்
இரத்தம் சிந்திய போதும்
மீட்டுவதை
அவன் நிறுத்தவில்லை.
பைஜுவின் பாட்டும்
ஆர்ஃபிசின் யாழுமாக
அதுகல்லையும் உருக்கியது; இறந்தவர்களையும்
உயிர்ப்பித்தது.
அந்த
இசைக் காந்தத்துக்குக்
கட்டுப்பட்டு
வாமனர்கள்
வானளாவி
வளர முடிந்தது.
சுட்டு விரலால்
ஆதிக்க கிரியைத்
தூக்கி
நிறுத்த முடிந்தது.
இந்த நாடு
மறுமலர்ச்சி பெற
அந்தக் காந்த இசை
மீண்டும் வேண்டுமாம்!
ஆனால் -
மீட்டவல்ல
கலைஞன் யார்?