பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

வேங்கடம் முதல் குமரி வரை

காஞ்சியில் இவள் அவதரிப்பதற்குக் காரணமாக இருந்தவர்கள் பந்தகாசுரன், பண்டாசுரன் என்பவர்களே. அவர்கள் செய்யும் இடுக்கண்களைத் தாங்க இயலாது தேவர்கள் தேவியிடம் முறையிடுகிறார்கள். தேவி காஞ்சியில் கிளி வடிவுடன் செண்பக மரத்தில் வாசம் செய்ய வருகிறாள். அப்படி வந்தவளே, அங்குள்ள ஒரு பிலாகாசத்தில் தோன்றித் துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் செய்கிறாள். அன்னை காமாக்ஷி பிலாகாசத்திலிருந்து சுயம்புவாகவே தோன்றியவள் என்று கூறுகிறது. தல வரலாறு.

ஸ்ரீ காமாட்சி

இந்த அம்பிகை மூன்று வடிவத்தில் இருக்கிறாள். கர்ப்ப கிருஹத்தில் மூலத் திருவாக இருப்பவளே அன்னை காமாக்ஷி. அவளையே அங்கே தவக்கோலத்திலும் காண்கிறோம். அன்னை பார்வதிக்கும் ஒரு காலத்தில் முனிவர்களது சாபம் ஏற்பட்டிருக்கிறது. சாபவிமோசனம் பெற, அவள் காசியில் பன்னிரண்டு வருஷங்கள் தவம் செய்கிறாள். அங்குன்ளவர்களின் பசியை எல்லாம் அகற்றி அன்னபூரணி என்று பெயர் பெறுகிறாள். அப்படியும் சாப விமோசனம் பெற முடியாமல், காசியிலும் சிறந்த காஞ்சிக்கு வந்து, அங்கு ஏகாம்பரமாக இருக்கும் மாமரத்தடியில் தவம் புரிகிறாள். அறம் வளர்க்கிறாள்.