பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

வேங்கடம் முதல் குமரி வரை

யாரோ ஒரு முனிவர் இக்குளக்கரையில் தவம் செய்யும்போது, குளத்தில் உள்ள மீன்கள்துள்ளி விளையாடி அவர் தவத்தைக் கலைத்ததென்றும், அதனால் கோபமுற்ற முனிவர் இக்குளத்தில் மீன்களே இல்லாமல் போக என்று சபித்ததாகவும் கதை. (சரி, இச்சாபத்தால் துயர் உறுகிறவர் நாமே. அழுக்கை யெல்லாம் உண்ணும் மீன்கள் இல்லாது போக, எல்லா அழுக்கும் சேர்ந்து திரண்டு, குளத்தையே மிக மிக அசுத்தமாக வைத்திருக்கிறது, முனிவர் சாபம்). இந்தப்

ஆனந்த விமானம்

புஷ்கரணியில் தான் பார்த்தசாரதி தெப்போற்சவம் ஏழு நாட்கள் நடை பெறுகிறது. சிறப்பான திருவிழா.

இனி, கோயிலுள் நுழையலாம். கோயிலின் முன்புள்ள மண்டபங்களைக் கடந்துதான் மகா மரியாதை வாயிலுக்கு வர வேணும். இந்த வாயிலுக்கு மேல்தான் முகத்துவாரக் கோபுரம் இருக்கிறது.

ஐந்து அடுக்கும் ஏழு ஆனந்த விமானம் கலசமும் கொண்ட கோபுரம் புதுப்பிக்கப் பட்டிருக்கிறது சில வருஷங்களுக்கு முன்னமேயே. இதைக் கடந்து, இன்னும் உள்ளேயிருக்கும் தொண்டரடிப் பொடி வாசலையும் கடந்துதான், பார்த்தசாரதியைச் சேவிக்கச் செல்ல வேணும்.