பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

வேங்கடம் முதல் குமரி வரை

இன்னும் குமரன் எல்லோரையும் தொழுது வணங்கிறவன் தான். நான் எப்படி சாயிபக்தன் ஆனேன் என்பது சில சைவர்கள் ஐயம். எனக்கு வேண்டிய நண்பர் ஒருவர் சாயிபக்தனாக இருந்தார் அவர் ஒரு வியாழக்கிழமை காலை என்னிடம் மாலையில் சாய்பாபா கோயிலுக்கு வாருங்களேன் என்றார்.

எனக்கு அப்போது சாயிபாபாவைப் பற்றி அதிகம் தெரியாததால் அக்கறை காட்டவில்லை. அவர் சொன்னார். சாயிபாபாவை நினைத்துக் கொண்டு ஒரு சிறு பிராத்தனை செய்து கொள்ளுங்கள். இன்று கோயிலுக்கு வாருங்கள் நாளை அது நடக்கும் என்பதற்கு ஓர் அறிகுறி காண்பீர்கள் என்றார். சரி இதை பரீக்ஷை செய்து பார்த்து விடலாமே என்று எண்ணியே அன்று மாலை நண்பருடன் கோயிலுக்குச் சென்றேன்.

அப்போது எனக்கு உத்தியோகத்தில் I.A.S.பதவி வர வேண்டிய காலம். அது எக்காரணத்தினாலோ எதிர்பார்த்த காலத்தில் கிடைக்கவில்லை. நாட்கள் கடந்து போய்க் கொண்டேயிருந்தது. ஆதலால் அன்று கோயிலுக்குப் போனேன். சாயிபாபாவின் படத்தை பார்த்தேன். அவர் ஜீவியவந்தராக இருந்தபோது அவர் கண்கள் தீக்ஷண்யம் பெற்ற இருக்குமாம். அதை எதிர் நோக்கவே மக்களால் இயலாதாம்.

அங்கு சாயிபாபாவின் உருவத்தில் உள்ள கண்களை பார்க்கப்பார்க்க அவை என் இதயத்தையே ஊடுருவுவது போன்ற அனுபவத்தைப் பெற்றேன். அதுவே ஓர் உள்ள நிறைவைத் தந்தது. அதன் பின் எனக்கு IAS பதவி விரைவில் கிடைக்க வேண்டும் என்று உள்ளன்போடு பிரார்த்தித்துக் கொண்டு வீடு திரும்பினேன், மறு நாட்காலை நான் ஆலுவலகத்திற்குச் சென்றால். IAS வரிசையில் சேர்ப்பதற்கு, வேண்டிய தகவல் ஒன்று கேட்டு சென்னை சர்க்காரிட மிருந்து தபால் வந்திருந்தது.