52
வேங்கடம் முதல் குமரி வரை
ஆனால் அவள் சுய உருவை நம்மால் எல்லாம் காணமுடியவா செய்கிறது. பூமிக்குள் மறைத்து வைத்திருந்த சுய ரூபத்தை வெளிப்படுத்தியது போலவே உழுகின்ற கொழு முகத்தில் சீதை உதிக்கின்றாள் என்றெல்லாம் கூறுகின்றான்.
உழுகின்ற கொழுமுகத்தின் உதிக்கின்ற கதிரின் ஒளி
பொழிகின்ற புவிமடந்தை திருவெளிப்பட்டெனப் புணரி
எழுகின்ற தெள்ளமுதோடு எழுந்தவளும் இழிந்துஒதுங்கித் தொழுகின்ற நன்னலலத்துப் பெண்ணரசி தோன்றினாள்.
என்பதுதானே கம்பனது பாட்டு,
சரி, பூமா தேவியின் அருள் உரு இன்னதென அறிந்து கொண்டோம். ஆனால் இந்தப் பூமாதேவியை அழித்து விட, சிதைத்துவிடச் செய்யும் அக்கிரமமும் நாட்டில் நடக்கத்தானே செய்கிறது? ஒரு கதிர் உதிர்கின்ற இடத்திலே இரண்டு கதிரைத் தோன்றச் செய்பவன் உலக வளர்ச்சிக்கே துணைபுரிகிறான் என்பர் பெரியோர், இதைத் தெரிந்தும் நாமே அணுகுண்டாலும் அக்கிரமத் தாலும் அவள் உருவையே சிதைக்க முற்படுகிறோம்.
இன்று நாம் முயல்கிறோம் என்றால் அன்றும் ஓர் அரக்கன் இதே முயற்சியில் ஈடுபட்டிருக்கிறான். பூமாதேவியையே சுருட்டி எடுத்துக் கடலுள் மூழ்க அடித்து விட முயன்றிருக்கிறான். அன்றும் வந்தான் பூமகளைக் காக்க ஒருவன், ஓர் உழவன். எல்லா உலகங்களையும் காத்தனிக்கும் அந்தப் பரந்தாமனே பன்றி உருவில் தோன்றிக் கடலுள் பாய்ந்து அரக்கனைக் கொன்று பூமாதேவியை மீட்டுக் கொண்டு வருகிறான். இப்படி வந்தவனையே வராக மூர்த்தி என்கிறோம், அவனை வாழ்த்துகிறோம், வணங்குகிறோம்.
பரந்தாமனது பத்து அவதாரத்தையுமே உலக வளர்ச்சியின் உதாரணம் (Evolution) என்று கொண்டால், வராக