பாவலரேறு பெருஞ்சித்திரனார்
131
புறப்படுங்கள் போருக்கு!
'தென்மொழி'யின் இவ்விரண்டாவது விடுதலை மாநாடு தமிழக விடுதலை வரலாற்றின் இரண்டாம் படிநிலை. அடுத்த மாநாடு கோவையில் இன்னும் ஆறு மாதத்திற்குள் நடைபெறும்.
1975-க்குள் மாவட்டப் பெருநகர்கள் தோறும் விடுதலை மாநாடு நடத்திவிட வேண்டும் என்பது கொள்கை.
நாம் வகுத்துக் கொண்ட திட்டப்படி 1975-இல் இருந்து 78-க்குள் போராட்டங்கள் நடைபெறும்.
1978-இல் கட்டாயம் புரட்சி நடந்தே தீரும். எவரும் வரவில்லையானாலும் நானும் என்னைச் சேர்ந்த மறவர்கள் ஒரு சிலரேனும் முனைந்து நடத்தியே தீருவோம்; நாங்கள் நாடு கடத்தப்பட்டாலும் அவ்வினைப்பாடு நடந்தே தீரும். எனவே ஆரியப் பார்ப்பனரும், தமிழ்ப் பகைவர்களும், சில பம்பைத் தலைகளும் இவ்வியக்கத்தை எவ்வாறேனும் முளையிலேயே கிள்ளிவிடலாம். கையிலேயே நசுக்கிவிடலாம் என்றெல்லாம் கனவு காண வேண்டா என்பது மட்டும்ன்று மனப்பாலும் குடிக்க வேண்டா.
அப்புரட்சிக் கோபுரத்திற்குப் போகும் படிக்கட்டுகள்தாம் இம் மாநாடுகள்!