பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

183


 
“அரசியலை விட்டு விலகித் தமிழக
விடுதலைக்குப் பாடுபடுங்கள்”
கலைஞர்க்கு நேரடி வேண்டுகோள்!


பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய கலைஞர் அருட்செல்வர்(கருணாநிதி) அவர்களுக்கு,

உங்கள் அரசியல் திறனில் நம்பிக்கையும், தமிழ். தமிழர் முன்னேற்றத்தின் மேல் நீங்கள் வைத்த அக்கறையில் உறுதியும்? கொண்ட அன்புள்ளம் எழுதிக்கொள்ளும், காலங்கருதி இடத்தால் விடுக்கும் நேரடி வேண்டுகோள்.

கலைஞர் அவர்களே! கடந்த தேர்தலில் நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ, அல்லது மக்களெல்லாம் எதிர்பார்த்தோ எதிர்பாராமலோ, நேர்ந்த அரசியல் வீழ்ச்சி, உண்மையிலேயே தமிழர்தம் இன முன்னேற்றத்தில் ஏற்பட்ட சரிவே ஆகும். என்பதை நாங்கள் மனமார உணர்கின்றோம். அவ்வீழ்ச்சியின் அடிப்படையில், இனி நாம் மேற்கோள்ள வேண்டிய உறுதிப்பாடுகளை, நம் மன அடைப்புகளையெல்லாம் விட்டு விட்டுக் கூர்மையான வெளிப்படையான முறையில் சிந்தித்துப் பார்க்காமல், நாம் அடைந்த தோல்விக்கான கரணியங்களைப் பற்றி ஆராய்வதும், பேசுவதும், அயர்வு வர எழுதிக் கொண்டிருப்பதும், மேலும் தம்மை சிதைத்துக் கொள்கின்ற செயல்களாகும். என்பதை உங்களுக்குக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.