பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

203

என்று மனப்பால் குடித்துக்கொண்டிருக்கும் அரசியல் கயவர்களுக்கும், ஆட்சித் திருடர்களுக்கும் நாம் சொல்ல விரும்புவது இதுதான் படைத்துறையையும் பதினக் கருவிகளையும் வைத்துக் கொண்டு மக்களின் உள்ளுணர்வுகளை என்றுமே சிறைப்படுத்தி விடலாம் என்று கனவு காணாதீர்கள். மக்கள் என்றுமே மெதுவாகச் சிந்திப்பவர்கள்; ஆனால் விரைவாகச் செயல்படுபவர்கள். அவர்கள் தூங்கலாம்; ஆனால் விழித்துக் கொள்ள நெடுநேரம் ஆகாது.

மக்கள் ஆற்றல் ஓர் எரிமலையைப் போன்றது. அ’து எப்பொழுது வெடிக்கும் என்று எவருமே கணித்துச் சொல்லிவிட முடியாது. இந்தியா முழுமையுமே பஞ்சாபாக மாறும் காலம் மிகத் தொலைவில் இல்லை! மாவீரன் பிந்தரன் வாலேயை வழிபடுகின்ற இளைஞர்கள் பஞ்சாபில் மட்டுமன்று வேறு மாநிலங்களிலும் இலக்கக் கணக்கில் உள்ளனர். அவர்கள் உங்களின் சொல் விளையாட்டு வேடிக்கைகளை உணர்ந்து வருகிறார்கள்! அவர்களின் செயல் விரைவில் எழுச்சி கொள்ளத்தான் போகிறது! எச்சரிக்கை!

- தமிழ்நிலம், இதழ் எண். 40, சூலை 1884