பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258

வேண்டும் விடுதலை

தமிழ்நாட்டுப் பிரிவினைக் கருத்துகளைப்
பெருஞ்சித்திரனார் தூண்டிவருகிறார்.

அண்மையில் நடுவணரசுச் செய்தி ஒலி - ஒளிபரப்புத்துறை அமைச்சகம், பாவலரேறு பெருஞ்சித்திரனார் மேலும், அவர் தென்மொழி, தமிழ்நிலம் ஆகிய இதழ்களில் எழுதிவரும் பாடல்கள், கட்டுரைகள், பேச்சுகள், நடவடிக்கைகள் ஆகியவற்றின் மேலும் நேரடி நடவடிக்கை எடுத்துக் கொண்டுள்ளது.

நடுவணரசுச் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகத்திலிருந்து, அரசுச் செயலர், திரு. சி.டி. குலட்டி(G.D. Gulati) இந்திய அரசின் செய்தித்தாள் பேரவை(Press Council of India)க்கு கடந்த 17.1.1986ஆம் பக்கல் எழுதிய குற்றச்சாட்டு மடலில், ‘குறிப்பிடப்பெற்ற பின்வரும் இதழ்களின் கட்டுரைகள், பாடல்கள் இவற்றின் பகுதிகள் அவற்றைப் படிக்கின்றவர்களுக்கு, நாட்டுப் பிரிவினை உணர்வாளர்களைத் தூண்டுகின்ற வகையில் அமைந்துள்ளன. அவை தொடர்பாக, அமைச்சகச் செய்தித்தாள் பிரிவகம் போதிய கருத்துச் செலுத்தித் தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நடவடிக்கை எடுக்க வேண்டியனவாக அமைச்சகச் செயலர் குறிப்பிட்டுள்ள பகுதிகள் வருமாறு:

தென்மொழி:

1. சுவடி 21, ஓலை : 10 (சூலை - ஆகத்து ‘85)
அட்டைப்பாடல் : ‘உரிமை ஒடுக்கமே விடுதலை. முழக்கம்'

2. மேற்படி இதழ் பக்கம் : 6
'சிங்கள வெறியர்களால் கற்பழிக்கப்பட்ட ஒரு தோழியின் கடிதம்'

3. மேற்படி இதழ் பக்கம் : 17
வள்ளிவேள்வனின் பாடல் ‘மண்ணில் ஒங்குக உரிமை ஈழமே'

4. சுவடி 21, ஓலை : 11 (ஆகத்து - செப். ‘85)
அட்டைப்பாடல் : ‘வன்பு வடவரை நடுங்கிட வைப்போம்’

5. சுவடி 21, ஓலை 12
அட்டைப்பாடல் : ‘அரசியலைச் சாராமல் இனவியலால் ஒன்றுபடுக'

தமிழ்நிலம்: இதழ் எண். 56 (28.4.1985)

1. முகப்புக் கட்டுரை: இந்தக் கட்டுரையில், இலங்கை பற்றிய செய்திகளில் தமிழ்நாடு அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது. இராசீவ் காந்தி செயவர்த்தனனுக்குத் துணை போகின்றார் என்ற பகுதிகளும் கரடிப்பட்டி க. கண்ணன் எழுதிய கட்டுரைப் பகுதிகளும்.