பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

263


 
தமிழின எதிர்காலத்
தீர்மானிப்புக் கருத்தரங்கு!

(தமிழக முன்னேற்றத்தின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் ஒரே தீர்மானம்)


உ.த.மு.க.வின் செயல் மேனிலைக் குழு, அண்மையில் தஞ்சையில் கூடி வரும் திசம்பர் மாதம் 27, 28-ஆம் பக்கல்களில், சென்னையில் "தமிழின எதிர்காலத் தீர்மானிப்புக் கருத்தரங்கு" என்னும் பெயரில், மிகப் பெரிய அளவில் ஒரு கருத்தரங்கை நடத்துவதெனத் தீர்மானித்தது.

கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளர், பேச்சாளர் என்னும் அளவில், எவரையுமே அழைக்காமல், தமிழின எதிர்கால முன்னேற்றத்தில் அக்கறையும், ஆர்வமும் கொண்ட அனைவருமே கூடி, அதன் எதிர்கால உறுதிப்பாட்டிற்கென ஒரு தீர்மானமாக இறுதி முடிவு ஒன்றை, உறுதி செய்வதென்றும், அதையே கழகம் எதிர்காலச் செயல் நடவடிக்கையாக மேற்கொள்வதென்றும், உலகத் தமிழின முன்னேற்றக் கழகத்தின் செயல் மேனிலைக் குழு தீர்மானித்தது.

குறிப்பிடப் பெற்ற இரண்டு நாள்களிலும், சென்னை நடுவிடத்தில், வரலாற்றுச் சிறப்புடைய இக் கருத்தரங்கம் நடக்கும்.

இக் கருத்தரங்களில் அனைவரும் பங்குகொள்ளலாம். அனைவருமே முன்னிசைவு பெற்றுக்கொண்டு பேசலாம். இறுதியில் பார்வையாளர்கள் நடுவில், ஓர் 'ஒப்போலைப் பதிவு'